கோலாலம்பூர், ஜன 19 – பினாங்கு மாநிலத்தின் சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவற்காக இந்திய நகரங்களுடன் சீனாவின் ஷாங்ஹாய் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் ஆகியவற்றுடன் நேரடி விமான சேவையை மேற்கொள்வதற்கு பினாங்கு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருவதாக பினாங்கு மாநில, சுற்றுலா, புத்தாக்க மற்றும் பொருளாதார துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹான் வை தெரிவித்தார். இந்தியாவுக்கும் பினாங்கிற்குமிடையே மேலும் அதிகமான நேரடி விமானச் சேவைக்கான வாய்ப்புக்களை கண்டறியும்பொருட்டு தாம் இந்தியாவின் புதுடில்லியிலுள்ள இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தின் தலைமையத்திற்கு வருகை புரிந்த தகவலையும் வோங் வெளியிட்டார்.
பினாங்கின் சுற்றுலா வளங்கள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தும் பொருட்டு தாமும் பினாங்கு மாநாடு ,கண்காட்சிப் பிரிவின் தலைமை செயல் அதிகாரி G. அஸ்வினும் மும்பை, புது டெல்லி, சென்னை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களின் சுற்றுலா தொழில்துறை பிரதிநிதிகளையும் சந்தித்தாகவோங் ஹான் வை கூறினார். பினாங்குடன் 13 அனைத்துலக நகரங்கள் நேரடி விமானச் சேவையை கொண்டுள்ளன.