Latestமலேசியா

ரி.ம 280,000 மேலான போலி பணக் கோரிக்கை நிறுவன இயக்குநர்கள் உட்பட மூவர் கைது

புத்ரா ஜெயா, பிப் 20 – 280,000 ரிங்கிட்டிற்கும் மேலான போலி பணக் கோரிக்கை தொடர்பில் ஒரு நிறுவனத்தின் இயக்குநர், நடவடிக்கை இயக்குநர் மற்றும் தங்கும் விடுதியின் தலைவர் உட்பட மூவரை MACC அதிகாரிகள் கைது செய்தனர். ஜோகூர் பாருவில் உணவு தயாரிப்பது மற்றும் உணவு விநியோகம் மற்றும் பொய்யான பண கோரிக்கை தொடர்பாக தங்கும் விடுதியின் தலைவருடன் நிறுவனத்தின் அந்த இரண்டு இயக்குநர்களும் உடந்தையாக இருந்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக MACC க்கு நெருக்கமான தகவல் தெரிவித்தன.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாம் முதல் 2022 ஆம் ஆணடு ஆகஸ்டு மாதம்வரை அம்மூவரும் போலி பணக் கோரிக்கையில் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டது. 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட அந்த மூவரும் நேற்று மாலை மணி 5அளவில் விசாரணைக்காக ஜோகூர் MACC அலுவலகத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டதை புத்ரா ஜெயா MACC இயக்குநர் Azizul Ahmad Sarkawi உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!