Latestமலேசியா

இந்திய பிரஜையிடம் RM 266,000 ரிங்கிட் தங்கக் கட்டிகள் கொள்ளை; ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச் 2 – RM 266,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் கை தொலைபேசியை இந்திய பிரஜையிடம் கொள்ளையடித்ததாக கிராஃபிக் டிசைனர் ஒருவர் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இன்னும் தலைமறைவாக இருந்துவரும் மற்றொருவருடன் சேர்ந்து 35 வயதுடைய எம். ரமேஷ் ராஜ், இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் முகமது முபாரக் சிக்கந்தர் என்பவருக்கு சொந்தமான 850 கிரேம் தங்கக் கட்டி மற்றும் கை தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். பிப்ரவரி 19 ஆம் தேதி பிற்பகல் மணி 2:10 மணியளவில், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, டாங் வாங்கியில் உள்ள உணவகத்தின் பின்புற பகுதியில் ரமேஷ் ராஜ் இந்தக் குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. அவர் அக்குற்றச்சாட்டை மறுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!