Latestமலேசியா

கிள்ளானில், மாமாக் உணவக பணியாளர், குப்பைத் தொட்டிக்குள் அழுக்குப் பாத்திரங்களை கழுவும் காணொளி வைரல்

கிள்ளான், ஜனவரி 10 – சிலாங்கூர், கிள்ளான், பண்டார் பொட்டானிக்கிலுள்ள, மாமாக் உணவக பணியாளர், அந்த உணவகத்திற்கு பின்னாள் குப்பைத் தொட்டிக்குள் அழுக்கு பாத்திரங்களை கழுவும் காணொளி வைரலாகியுள்ளது.

இரு குப்பை தொட்டிகளில் அந்த பணியாளர் அழுக்குப் பாத்திரங்களை நனைத்து கழுவும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.

@elyasyusrizal என்பவர் தனது X சமூக ஊடகத்தில் அந்த காணொளியை பதிவேற்றம் செய்துள்ளார்.

இது கொஞ்சம் கூட சுகாதாரமானது அல்ல! எனவும் அந்த காணொளிக்கு கீழ் பதிவிடப்பட்டுள்ளது.

அதோடு, சம்பந்தப்பட்ட பணியாளரை அணுகிய போது, “வாஷ் ஏரியா” என்பது அழுக்குப் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்காக மட்டுமே என்றும், குப்பைகளை அகற்றுவதற்காக அல்ல என்றும் கூறியுள்ளார்.

அந்த பதிலில் அதிர்ச்சியடைந்த @elyasyusrizal, அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப் போவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!