Latestமலேசியா

கம்பாரில், மக்களை அச்சுறுத்து வந்த புலி; இறந்து கிடந்தது

ஈப்போ, நவம்பர் 9 – இதற்கு முன் பேராக், கம்பார், சாஹோம் பகுதியில் சுற்றித் திரிந்த ஆண் புலி, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், குவா தெம்புருங் ஓய்வுப் பகுதிக்கு அருகில், நேற்றிரவு இறந்து கிடக்க காணப்பட்டது.

டிரெய்லர் லோரி மோதி அந்த புலி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பில், நள்ளிரவு மணி 12.30 வாக்கில், PERHILITAN – பேராக் மாநில வனவிலங்கு பாதுகாப்பு துறையிடமிருந்து தமக்கு தகவல் கிடைத்ததை, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தேய் கோக் லிம் உறுதிப்படுத்தினார்.

எட்டு முதல் பத்து வயதுக்கு உட்பட்டது என நம்பப்படும் அந்த புலியின் உடல், மேல் நடவடிக்கைகாக, சுங்கையிலுள்ள, வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதற்கு முன், கம்பார் சுற்று வட்டாரப் பகுதியில் கால்நடைகளை கொன்று தின்று, மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அதே புலிதான் மடிந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் தேய் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!