சென்னை , டிச 4 – மிச்சாங் புயல் அபாயத்தை தொடர்ந்து சென்னை மீனம்பக்கம் பகுதியில் தொடர்ந்து கடுமையாக மழை பெய்து வருவதால் விமான நிலையத்தின் ஓடும் பாதையில் 2 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் ஒட்டு மொத்தமாக 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதர 30 விமானங்கள் திருச்சி, ஹைதரபாத் உள்ளிட்ட பல நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஓடு பாதையில் தண்ணீர் தேங்கியதால் விமானங்களை இயக்க முடியவில்லை. வெளிநாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியாவின் இதர மாநிலஙகளிலிருந்தும் வந்த விமானங்களும சென்னை மீனம்பக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அரபு நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருபி விடப்பட்டன.