கூருன், மார்ச் 17 – கெடா, கூருனில் இன்று அதிகாலை விரைவுப் பேருந்து டிரேய்லருடன் மோதி தீ பிடித்ததில், பேருந்து ஓட்டுநனர் உடல் கருகி மாண்டார்.
வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 75.2-வது கிலோ மீட்டரில் விடியற்காலை 3.55 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், 6 பயணிகள் உயிர் தப்பினர்.
உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் 42 வயது ஆண் என மட்டுமே தெரிய வந்துள்ளது; எனினும் அவரின் அடையாளம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தீயில் கருகிய அவரின் உடல் பேருந்து இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.
பேருந்து பயணிகள் ஐவரும், டிரேய்லர் ஓட்டுநரும் உயிர் தப்பியதாக குவார் செம்படாக் தீயணைப்பு மீட்புத் துறையின் தலைவர் மொஹமட் ஃபாவுசி ரசாலி தெரிவித்தார்.
18 பேர் கொண்ட குழு தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய ஃபாவுசி, காப்பாற்றவர்களை நிர்வகிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொன்னார்.