Latestமலேசியா

2024 ஆண்டின் 2ஆவது காலாண்டில் மெர்டேக்கா அரங்கம் திறக்கப்படும்

கோலாலம்பூர், ஜன 11 – நாட்டின் மிகப் பெரிய வரலாறு மற்றும் முக்கிய அடையாள சின்னமாக திகழும் மெர்டேக்கா அரங்கம்  இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு அந்த அரங்கம் மூடப்பட்டது. 1957ஆம் ஆண்டு மெர்டேக்கா அரங்கம் திறக்கப்பட்ட அதன் அசல்  தோற்றத்தைப் போலவே மீண்டும் அதனை உருவாக்கும்  முயற்சிகளுக்கு மலேசியா பாரம்பரிய மையம் மற்றும் தேசிய பாரம்பரியத் துறையின் ஒத்துழைப்பை பெற்றுள்ளதாக   பெர்மோடாலன் நேஷனல் பெர்ஹாட் குழும தலைவர் டான் ஸ்ரீ அர்ஷத் ராஜா துன் உடா தெரிவித்தார். 2005ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தேசிய பாரம்பரிய மையமாக பதிவு செய்யப்பட்ட மெர்டேக்கா  அரங்கத்தின்  உரிமையாளராக PNB மெர்டேக்கா வென்ச்சர்ஸ் இருந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!