பெய்ஜிங், பிப்ரவரி 20 – சீனாவிலுள்ள, நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஐயாயிரம் தொழிலாளர்களுக்கு, அண்மையில் அந்நிறுவனம் பத்து கோடி யுவான் அல்லது ஆறு கோடியே 70 லட்சம் ரிங்கிட்டை “போனஸ்” ஊக்குவிப்புத் தொகையாக கொடுத்து அசத்தியது.
ஒரு விளையாட்டின் மூலமாக அந்த பணம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
ஊழியர்கள், அவர்களால் விரைந்து சரியாக எண்ண முடிந்த பணத்தை போனஸாக வீட்டிற்கு கொண்டு செல்லலாம் என்பதே அந்த விளையாட்டின் நிபந்தனையாகும்.
அதற்காக, சுமார் 50 மீட்டர் நீளமுள்ள மேஜை ஒன்றில், 100 யுவான் பண நோட்டுகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.
எனினும், பிழையாக எண்ணும் ஒவ்வொரு முறையும் ஆயிரம் யுவான் கழிக்கப்படும்.
அந்த போட்டியில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் மிக அதிகமாக 97 ஆயிரத்து 800 யுவான் அல்லது 65 ஆயிரத்து 132 ரிங்கிட் 95 சென்னை போனஸாக வெற்று அதிஷ்டம் வாய்ந்த வெற்றியாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.