Latestமலேசியா

பிரதான குழாயில் ஏற்பட்ட துவாரத்தினால் பங்கோர் தீவில் நீர் வினியோக தட்டுப்பாடு

ஈப்போ , பிப் 14 – கடலுக்கு கீழ் பொருத்தப்பட்டுள்ள மூன்று பிரதான குழாய்களின் ஒன்றில் ஏற்பட்ட துவாரத்தினால் பங்கோர் தீவுக்கான நீர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் நிசார் ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார். தற்போது லுமுட் படகுத் துறையிலிருந்து பங்கோர் தீவு வரை 3.5 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட நீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள துவாரத்தை கண்டறியும் நடவடிக்கையை பேரா தண்ணீர் வாரியம் மேற்கொண்டு வருவதாக அடிப்படை வசதி , எரிபொருள், நிர் மற்றும் பொது போக்குவரத்துதிற்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினரான நிசார் கூறினார். பிரதான நீர் குழாயில் 600 மில்லி மீட்டர், 350 மில்லிமீட்டர் மற்றும் 330 மில்லிமீட்டர் அளவிற்கு ஏற்பட்ட துவாரங்கள் பிப்ரவரி 5ஆம்தேதி பழுதுபார்க்கப்பட்டன. அதன் பிறகும் கூட நீர் அழுத்தம் வழக்க நிலைக்கு திரும்பவில்லையென அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!