ஈப்போ , பிப் 14 – கடலுக்கு கீழ் பொருத்தப்பட்டுள்ள மூன்று பிரதான குழாய்களின் ஒன்றில் ஏற்பட்ட துவாரத்தினால் பங்கோர் தீவுக்கான நீர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் நிசார் ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார். தற்போது லுமுட் படகுத் துறையிலிருந்து பங்கோர் தீவு வரை 3.5 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட நீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள துவாரத்தை கண்டறியும் நடவடிக்கையை பேரா தண்ணீர் வாரியம் மேற்கொண்டு வருவதாக அடிப்படை வசதி , எரிபொருள், நிர் மற்றும் பொது போக்குவரத்துதிற்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினரான நிசார் கூறினார். பிரதான நீர் குழாயில் 600 மில்லி மீட்டர், 350 மில்லிமீட்டர் மற்றும் 330 மில்லிமீட்டர் அளவிற்கு ஏற்பட்ட துவாரங்கள் பிப்ரவரி 5ஆம்தேதி பழுதுபார்க்கப்பட்டன. அதன் பிறகும் கூட நீர் அழுத்தம் வழக்க நிலைக்கு திரும்பவில்லையென அவர் தெரிவித்தார்.
Related Articles
கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல்; பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக DAPயின் Pang Sock Tao போட்டி
4 hours ago
“நாங்கள் எதிர்ப்போம்”; Tik Tok தடை செய்யும் மசோதாவில் ஜோ பைடன் கையெழுத்திட்டதிற்கு டிக் டோக் தலைமை நிர்வாக அதிகாரி பதில்
5 hours ago
Check Also
Close