பெரா, ஜனவரி 18 – பஹாங், பெரா, டிரியாங்கிலுள்ள, வீடொன்றின், குளியல் அறையில், பெண் ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
அச்சம்பவம் குறித்து, நேற்று காலை மணி ஒன்பது வாக்கில், சுகாதார துறை பணியாளர்களிடமிருந்து போலீசுக்கு தகவல் வழங்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் குளியல் அறையில், கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டதாக, பெரா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜுல்கிப்ளி நாசிர் தெரிவித்தார்.
அதோடு, நடந்த சம்வத்திற்கு மன்னிப்புக் கோரியதோடு, தனது பிள்ளைகளை பார்த்துக் கொள்ளுமாறு கோரி, அப்பெண் தனது சகோதரர்களுக்கு எழுதிய குறிப்பு ஒன்றும், சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக, ஜுல்கிப்ளி சொன்னார்.
அந்த குறிப்பு உண்மையில் அப்பெண் எழுதியது தானா என்பதை உறுதிச் செய்ய, அது தடயவியல் பிரிவுக்கு அனுபப்பட்டுள்ளது.
மன அழுத்தத்`தால் பாதிக்கப்பட்டிருந்த அப்பெண், கடந்த ஒரு மாதக் காலமாக தூக்கம் இன்றி அவதியுற்று வந்தது, தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனால், அது கொலை அல்லது கொள்ளை வழக்கு இல்லை என போலீசார் நம்புகின்றனர். எனினும், அச்சம்பவம் தொடர்பில், விசாரணை தொடர்கிறது.