Latestமலேசியா

மலாக்காவில், வீடு புகுந்து கொள்ளையிடும் முயற்சி தோல்வி; கூரையிலிருந்து குதிக்க போவதாக மிரட்டிய மியன்மார் ஆடவன் கைது

மலாக்கா, டிசம்பர் 11 – மலாக்கா, தாமான் பெர்தாம் ஜெயாவில், வீடொன்றை உடைத்து கொள்ளையிட முயன்ற மியன்மார் ஆடவன் ஒருவனின் செயல் அம்பலமானதை அடுத்து, வீட்டின் கூரையிலிருந்து குதிக்க போவதாக அவன் மருட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று நண்பகல் மணி ஒன்று வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அவ்வாடவன் வீடொன்றில் புகுந்து கொள்ளையிட முயல்வதை, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்து விட்டதை உணர்ந்த அவன், உடனடியாக அவ்வீட்டின் கூரை மேல் ஏறி தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக மருட்டல் விடுத்துள்ளான்.

அச்சம்பவம் தொடர்பில், பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவ்வாடவனை பாதுகாப்பாக கீழே கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டனர், என மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் கிறிஸ்டொப்பர் பாதிட் தெரிவித்தார்.

எனினும், அதனை அவன் பொருட்படுத்தவில்லை என்பதோடு, மேலே ஏற முயன்ற போலீஸ் அதிகாரி ஒருவரை நோக்கி தகரங்களை வீசியதோடு, அருகிலுள்ள மற்றொரு வீட்டின் கூரைக்கு அவன் தாவி சென்றுள்ளான்.

ஆனால், சிறிது நேரத்தில், அவ்வாடவன் அமர்ந்திருந்த கூரை திடீரென உடையவே, கீழே விழுந்த அவனை போலீசார் கைதுச் செய்தனர்.

அச்சம்பவத்தில், சிறு காயங்களுக்கு இலக்கான அவன் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!