சபா, மார்ச் 14 – சபாவைச் சேர்ந்த 53 வயதான பாதுகாவலர் ஒருவர் மார்ச் 2, RM 13.4 மில்லியன் ரிங்கிட் ‘Toto’ ஜாக்பாடில் வென்றுள்ளார்.
அந்த நபர் தனது பிறந்தநாளின் தேதி மற்றும் புதிதாக வாங்கிய வாகனத்தின் பதிவு எண்களை தனது அதிர்ஷ்ட எண்களாகப் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெறும் RM 2 ரிங்கிட் 60 சென்னை பயன்படுத்தி அந்த எண்களை பெற்றுள்ளதாக கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இச்செய்தியை கேள்வியுற்ற அவரின் மனைவியால் ஆனந்த கண்ணீரை நிறுத்த முடியவில்லையாம்.
தனக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்த வெற்றியை, தனது உடன்பிறந்தவர்கள் உட்பட குடும்பத்தினர் தங்குவதற்கான பெரிய வீட்டைக் கட்டும் கனவை நிறைவேற்றி கொள்வதற்கு பயன்படுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.
‘சபாஹான் பழங்குடியாக இனி என் மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை செய்ய முடியும். மீண்டும் திரும்பிச் சென்று இதன் வழி எனது கிராமத்தை மேம்படுத்த விரும்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.