Latestமலேசியா

காஜாங்கில், போலி மருத்துவ விடுப்பு சான்றிதழை விற்கும் கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு ; 4 பெண்கள் உட்பட அறுவர் கைது

காஜாங், டிசம்பர் 6 – சிலாங்கூர், காஜாங்கில், போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை விற்று வந்ததாக நம்பப்படும், கும்பல் ஒன்றின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன.

அக்கும்பலை சேர்ந்த 4 பெண்கள் உட்பட அறுவர் கைதானதை அடுத்து, அது சாத்தியமானதாக, காஜாங் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முகமது ஜெய்த் ஹாசன் தெரிவித்தார்.

இம்மாதம் எட்டு மற்றும் ஒன்பதாம் தேதிகளில், காஜாங், புக்கிட் ஜாலில் ஆகிய பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 26 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும் கைதுச் செய்யப்பட்டனர்.

கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வருவதாக நம்பப்படும் அக்கும்பல், 30 ரிங்கிட் முதல் 50 ரிங்கிட் வரையில் போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை விற்று வந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சோதனையின் போது, ஆறு போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ் புத்தகங்கள், 171 அரசாங்க மருத்துவ விடுப்பு சான்றிதழ்கள், 70 தனியார் மருத்துவ விடுப்பு சான்றிதழ்கள், 19 கட்டண அறிக்கைகள், மடிக் கணினி ஒன்று உட்பட எட்டு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதுச் செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக ஐந்து நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!