Latestமலேசியா

கல்விச் சுடராய் தீப ஒளி மிளிரட்டும்! – செனட்டர் டத்தோ நெல்சன்

கோலாலம்பூர், நவ 11-தீபத் திருநாளை கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் ம.இ.கா கல்விக் குழுவின் தலைவர் செனட்டர் டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மங்கள ஒளியின் தீபம் , இருளை விரட்டுவது போல அஞ்ஞானத்தை அகற்றி இந்திய சமுதாயத்தை நல்வழிப்படுத்த நமக்கான ஒளி கல்வி ஆகும் என நெல்சன் தெரிவித்தார். கல்வி என்பது அடிப்படை உரிமை. கல்வியால் மட்டுமே அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் கல்வி என்பது இந்த நாட்டில் நமது சமுதாயத்தை உயர்த்தக் கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் என அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசிய இந்தியர்களுக்கான தாய்க் கட்சியான ம.இ.கா நமது வருங்கால சந்ததியின் கல்வி மேம்பாட்டிற்கு தொடர்ந்து தோள் கொடுக்கும் என்பதை இந்த வேளையில் உறுதி செய்வதாக நெல்சன் கூறினார். தீபாவளியின் சுடர் கல்விச் சுடராக காலந்தோறும் மிளிர வேண்டும் . மலேசிய இந்தியர்களின் அன்போடு ம.இ.கா கல்விக் குழு இந்த நோக்கத்திற்காக உழைக்கும் என்பதை செனட்டர் நெல்சன் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!