கனடா, நவம்பர் 11 – தீபாவளியை வரவேற்கும் வகையில், கனடிய அரசாங்கம் புதிய அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
அந்த தபால் தலை கிறிஸ்டின் டோ மற்றும் ரெனா சென் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தீபத் திருநாள் மட்டுமின்றி, நல்ல காரியங்களை தொடங்குவதற்கு முன், வீடுகள் மற்றும் கோவில்களின் நுழைவாயில் மற்றும் முகப்புகளில் மாலைகள் போல கட்டித் தொங்கவிடப்படும் தோரணங்களை அடிப்படையாக கொண்டு அந்த அஞ்சல் தலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்துகளின் மங்கலகரமான மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் அந்த அஞ்சல் தலை ஒன்று 5.52 கனடிய டாலர் அல்லது 18 ரிங்கிட் 80 சென் விலையில் விற்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு கனடிய அரசாங்கம் அஞ்சல் தலையை வெளியிடுவது இது முதல் முறையல்ல. 2017-ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருநாளை வரவேற்கும் வகையில் கனடா அரசாங்கம் அஞ்சல் தலையை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.