கோலாலம்பூர், பிப் 17 – அம்பாங் , தாமான் பாண்டன் சஹாயா கடை வீடு ஒன்றில் கூரையின் மேல் இறந்து கிடந்த 71 வயதான வடிவேலுவின் உடல் மீட்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குனர் அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார். நேற்றிரவு மணி 7:04 அளவில் அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் வடிவேலு மரணம் அடைந்ததை உறுதிப்படுத்தினர். அந்த கடை வீட்டின் கூரைப் பகுதியிலிருந்து இறக்கப்பட்ட அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close