Latestமலேசியா

கணிதம் & அறிவியல் பாடங்கள் முழுமையாக ஆங்கில மொழியில் போதிக்க 5 ஆரம்பப்பள்ளிகளுக்கு அனுமதி

கோலாலம்பூர், டிச 6: கோலாலம்பூரில் உள்ள 5 ஆரம்பப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களின் கற்றல், கற்பித்தலை ஆங்கில மொழியில் முழுமையாகப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 3 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்.

விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, சிகாம்புட் தமிழ்ப்பள்ளி, எடின்பார்க் தோட்டத் தமிழ்ப்பள்ளி அவையாகும். புக்கிட் நன்னாஸ் (1) கான்வெண்ட், புக்கிட் டாமன்சாரா ஆரம்பப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இரு மொழிப் பாடத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அப்பள்ளிகளில் 2023/2024 தவணையில் முதலாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த இருமொழிப் பாடத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!