ஜோகூர் பாரு, ஜன 29 – உதவித் தொகை டிசல் எண்ணெயை சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா பஸ்ஸிற்கு விற்பனை செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களை எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர் மறுத்தார். 1,175 ரிங்கிட் மதிப்புள்ள 500 லிட்டர் டீசலை விற்பனை செய்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் ஜோகூர் பாருவிலுள்ள எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளராக சோரயா மாட் டாமிஸ் என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. செஷன்ஸ நீதிமன்ற நீதிபதி டத்தோ ச்சே வான் சாயிடி ச்சே வான் இப்ராஹிம் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்களை 38 வயதுடைய சோரயா மாட் டாமிஸ் மறுத்தார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கட்டுப்பாடு விதிமுறையை மீறியதாக அவர் மீது முதல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டு வாகனங்களுக்கு 20 லிட்டர் டீசல் எண்ணெயை மட்டுமே விற்க முடியும் என்ற விதிமுறையை அவர் மீறியுள்ளார். மேலும் வெளிநாட்டு பஸ்ஸிற்கு 250 லிட்டர் டீசலை விற்பனை செய்ததாகவும் சோரயா மாட் டாமிஸ் மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி காலை மணி 11.04 அளவில்ஜாலான் கெம்பாஸ் பாருவில் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு மே மாதம் 30 ஆம் தேதியும் மீண்டும் அதே சிங்கப்பூர் பஸ்ஸிற்கு அவர் மேலும் 250 லிட்டர் டீசல் எண்ணெயை விற்பனை செய்துள்ளார். சோரயா மாட் டாமிஸ் மீதான குற்றச்சாட்டு பிப்ரவரி 28 ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்