கோலாலம்பூர், பிப் 17 – மொத்தம் 93.26 மில்லியன் ரிங்கிட் மோசடியை உள்ளடக்கிய ‘Accerz cytocurrency’ மோசடி கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர். அந்த கும்பலை முறியடிப்பதற்காக கடந்த வாரம் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்ற விசாரணைத் துறையின் இயக்குனர் கமிஷனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்துள்ளார். கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், பஹாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய இடங்களில் 35 ஆடவர்கள் மற்றும் 8 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 21 மற்றும் 78 வயதுக்குட்பட்டவர்களாவர். இவர்களில் நிறுவன இயக்குனர், வர்த்தக உரிமையாளர்கள் நிறுவன செயலாளர் ஆகியோர் அடங்குவர் என ரம்லி தெரிவித்தார்.
Related Articles
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
2 hours ago
ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த ‘சூட்கேஸ்’ ; ஒரு வாரம் ஆகியும், இன்னும் உரிமைக் கோர யாரும் முன் வரவில்லை
2 hours ago