கோலாலம்பூர், டிச 15 – கிளந்தான், திரெங்கானு மற்றும் சிலாங்கூர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் வெள்ளத்தினால் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை தொடர்ந்து அதிகரித்தது.
கிளந்தானில் தானா மேரா மற்றும் குவாலா கிராயில் 366 குடும்பங்களைச் சேர்ந்த 1,201 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் 18 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
திரெங்கானுவில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. உலு திரங்கானு மற்றும் சேதியாவில் உள்ள 9 நிவாரண மையங்களில் 148 குடும்பத்தைச் சேர்ந்த 461 பேர் தங்கியுள்ளனர்.
இதனிடையே சிலாங்கூரில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் கோலா சிலாங்கூரில் எஸ்.கே ஜெயா செத்தியா ‘SK Jaya Setia’ மற்றும் பாலாய் ராயா பாரிட் மஹாங்கில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.