Latestமலேசியா

விசாரணை முடியும்வரை அமான் பாலஸ்தீன் நிதி ஒப்படைக்கப்படாது; MACC திட்டவட்டம்

கோலாலம்பூர், டிச 1 – அமான் பாலஸ்தீன் மீதான விசாரணை முழுமையடையும்வரை அந்த அமைப்பிடமிருந்து முடக்கப்பட்ட 10 மில்லியன் ரிங்கிட் வங்கிக் கணக்கு ஒப்படைக்கப்படாது என MACC திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உடனடி நிதியதாக அந்த 10 million ரிங்கிட் Aஅமான் பாலஸ்தீன் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் விடுத்திருந்த ஆலோசனையை நிராகரிப்பதாக MACC யின் தலைமை ஆணையர் ஆசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார். அந்த அரசு சார்பு நிறுவனத்தின் பணப் பட்டுவாடா தொடர்பில் இன்னமும் விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை முழுமையடையும்வரை முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு ஒப்படைக்கப்படாது என அவர் கூறினார்.

பொதுப் பணத்தில் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை பயன்படுத்தும்போது, பொறுப்புணர்வு தொடர்பில் விசாரணையின்போது தெளிவான முடிவு தெரியும்வரை அந்த நிதியை மீட்டுக்கொள்வதை அனுமதிக்க முடியாது என ஆசாம் பாக்கி தெரிவித்தார். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடுமையாக கருதுவதாகவும் பொது நிதியை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் பயன்படுத்தக்கூடாது என்பதில் ஒரு முன்னுதாரணத்தை MACC ஏற்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!