Latestமலேசியா

சிறுவன் ஜெய்ன் ரய்யான் கொலையாளியை போலீஸ் இன்னமும் தேடி வருகிறது ஐ.ஜி.பி கூறுகிறார்.

கோலாலம்பூர், டிச 20 – ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின்னை கொலை செய்த நபரை போலீஸ் இன்னமும் தேடிவருவதாக போலீஸ் படைத் தலைவர் ரஸாருதீன் உசேன் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை தொடரும் இவ்வேளையில் மரபணு பரிசோதனையின் முடிவை நாங்கள் பெற்றுள்ளோம். பல சாட்சிகளிடம் வாக்குமூலத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம் என அவர் கூறினார்.

Zayn Rayyan கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி உள்நாட்டை சேர்ந்தவரா என்பதை கண்டறியும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற அனைத்து ஆதாரங்களையும் பரிசீலிப்பதற்கு விசாரணை குழுவினருக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும், இதுவரை போலீசார் 280 வீடுகளில் சோதனை நடத்தியுள்ளதோடு ஜெய்ன் ரய்யானின் பெற்றோர்கள், அண்டை வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் 172 தனிப்பட்ட நபர்களின் சாட்சியங்களை பெற்றுள்ளதாகவும் ரஸாருதீன் தெரிவித்தார்.

டிசம்பர் 5ஆம் தேதியன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாட்டைக் கொண்ட சிறுவன் ஜெய்ன் ரய்யான், மறுநாள் தமது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள நீரோடையில் இறந்து கிடந்தான்.

கழுத்து நெறிக்கப்பட்டதற்கான காயத்தின் அடையாளம் இருந்ததால் அச்சிறுவன் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!