கோலாலமபூர், டிச 9 – மலேசிய காற்பந்து உலகில் JDT எனப்படும் ஜோகூர் டாருல் தாசிம் குழு தனது ஆளுமையை நிருபித்து தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று வரலாற்று சாதனையை படைத்தது. நேற்றிரவு புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் “Southern Tigers” என வருணிக்கப்படும் JDT 3-1 என்ற கோல் கணக்கில் திரெங்கானு குழுவை வீழ்த்தி இரண்டாவது முறையாக நான்கு விருதுகளை வென்றது. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் “Comunity Shield”, எப்.ஏ (FA) கிண்ணனம், சூப்பர் லீக் மற்றும் மலேசிய கிண்ணத்தையும் வென்றது.
ஆட்டம் தொடங்கிய 5ஆவது நிமிடத்தில் JDT முதல் கோலை அடித்தது. பெனால்டியின் மூலம் பிரேசிலின் பெர்க்சன் டா சில்வா அந்த கோலை அடித்தார். இந்த கோல் அடித்த மகிழ்ச்சி மறைவதற்குள் அடுத்த 15 ஆவது நிமிடத்தில் திரெங்கானு குழுவினர் ஒரு கோலை அடித்து நிலைமையை 1- 1 என்றாக்கினர். அதன்பின்னர் 73 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் மற்றும் 94ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்து இந்த ஆட்டத்தில்
3 -1 என்ற கோல் கணக்கில் JDT குழு வெற்றி பெற்றது.