கோலாலம்பூர், டிச 2 – சமீபத்தில் தனது அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியின் மின் தூக்கியில் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அவருக்கு சிறுவயதிலிருந்தே மின் தூக்கியில் சிக்கிக் கொள்வது என்றால் பயமாம். அது இப்போது நடந்துவிட்டதை எண்ண்ணி அப்பெண் கதறி அழும் காணொளியை அவரே தனது டிக் டோக்கில் வேதனையுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.
அவர் முதலில் பெற்றோருக்கும், பின் தீயணைப்பு மீட்புத் துறைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின், பிராணவாயு பற்றாக்குறையால் மயக்கமடைந்து, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பிறகு நலமுடன் வீடு திரும்பியதாக அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.