Latestமலேசியா

கடன் பிரச்சனை ; குவாலா திரங்கானுவில், நண்பனை கொலை செய்த ஆடவனுக்கு 10 ஆண்டு சிறை

குவாலா திரங்கானு, பிப்ரவரி 20 – தனது நண்பர் ஒருவரை எதிர்பாராவிதமாக கொலை செய்த தொழிலாளி ஒருவருக்கு, திரங்கானு, குவாலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

40 வயது முஹமட் அலியாஸ் மொக்தார் எனும் அவ்வாடவன் தனது எதிரான கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்தாண்டு நவம்பர் 19-ஆம் தேதி, இரவு மணி 8.30 வாக்கில், 45 வயது மார்சுகி சே டாவுட்டை, தலை கவசம், கத்தி மற்றும் சுத்தியலை கொண்டு தாக்கி அவரை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வெறும் ஆயிரம் ரிங்கிட் கடன் பிரச்சனையால் அவர்களுக்குள் சண்டை மூண்டதாக கூறப்படுகிறது.

அதனால், கொலையாளிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை அவன் கைதானா நாளிலிருந்து அமலுக்கு வருவதாக நீதிபதி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!