Latestமலேசியா

பாலேக் பூலாவில் விபத்தில் சிக்கியக் காரில் கால் மாட்டிக் கொண்டு ஓட்டுநர் வலியால் அவதி

பாலேக் பூலாவ், மார்ச்-15 – பினாங்கு பாலேக் பூலாவில் விபத்தில் சிக்கியத் தனது காரில் கால் மாட்டிக் கொண்டதால், சுமார் அரை மணி நேரங்களுக்கு ஓட்டுநர் வலியால் துடித்தார்.

காலில் காயமடைந்த 31 வயது அவ்வாடவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

‘Anjung Indah’ அருகே மலைப்பாங்கான ‘Jalan Tun Sardon’-னில் வியாழக்கிழமை பிற்பகல் வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

“தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த போது, ‘Perodua Kelisa’-வும் ‘Nissan Serena’ காரும் விபத்துக்குள்ளானதைக் கண்டோம். அதில் காருக்குள் கால் மாட்டிக் கொண்டு வெளியே வர முடியாமல் வலியால் தவித்த ‘Kelisa’ ஓட்டுநரை, சிறப்புக் கருவிகள் உதவியுடன் மீட்டோம்” என ஸ்ரீ பாலேக் பூலாவ் தீயணைப்பு மீட்புப் படையின் கொமாண்டர் அஸ்மான் மொஹமட் ஈசா சொன்னார்.

அவரை வெளியே கொண்டு வர 16 நிமிடங்கள் பிடித்ததாக அஸ்மான் கூறினார்.

‘Kelisa’ காரோட்டி உடனடியாக பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளை, மற்றொரு காரோட்டிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

‘Kelisa’ கார் பாலேக் பூலாவில் இருந்தும், ‘Nissan’ பாயா தெருபோங்கில் இருந்தும் வந்துக் கொண்டிருந்த போது, இரண்டும் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!