பேங்காங், ஜன 18 – தாய்லாந்தின் மத்திய பகுதியிலுள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்ததாக பேரிடர் தடுப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. சுபன் புரி மாநிலத்திலுள்ள அந்த தொழிற்சாலையில் வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு தீப்பிடித்தது. அந்த வெடிப்புக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. பேங்காக்கிலிருந்து 74.56 மைல் தொலைவுக்கு அப்பால் இருக்கும் சுபன் புரிமாநிலம் தாய்லாந்தின் முக்கிய நெற்களஞ்சிய பகுதிகாக விளங்கிவருகிறது.
Related Articles
ஹாலிவூட் படத்தில் சிறப்புத் தோற்றம்; உள்ளூர் செய்தி வாசிப்பாளர் மோகனபிரியாவின் புதிய மைல்கல்
6 hours ago
தீபகற்ப மலேசியாவில், வரும் ஞாயிறு வரை மோசமான வானிலை நீடிக்கலாம் : மெட்மலேசியா எச்சரிக்கை
6 hours ago
Check Also
Close