தோக்யோ, ஜன 3 – ஜப்பானில் புத்தாண்டின்போது ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் கடுமையான மழை மற்றும் நிலச்சரிவினால் நில நடுக்கத்தில் பாதிக்கக்பட்டவர்களை மீட்கும் பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய தீவான ஹோன்ஷு-விலுள்ள இஷிகாவா வட்டாரத்தில் ரெக்டர் கருவியில் 7.5 அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் ஜப்பானில் கடலோர பகுதிகளில் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமியும் ஏற்பட்டது. நில நடுக்கத்தினால் நோட்டோ தீபகற்பம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான கட்டடிடங்களும் வீடுகளும் தரைமட்டமாகின. நிலநடுக்கத்தில் இதுவரை 55 பேர் மாண்டதோடு 22 பேர் கடுமையாக காயம் அடைந்ததாக வட்டார அரசாங்கம் நேற்று அறிவித்தது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Related Articles
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
2 hours ago
ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த ‘சூட்கேஸ்’ ; ஒரு வாரம் ஆகியும், இன்னும் உரிமைக் கோர யாரும் முன் வரவில்லை
2 hours ago