கனடா, ஜன 14 – கனடா நாட்டில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் சிரமம் ஏற்படுவதால் பல விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட பல விமாங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை அன்று தேசிய அளவில் 100 மேற்பட்ட விமானங்களும், சனிக்கிழமையில் மொத்தம் 122 விமானங்களும் செயல்படுவதிலிருந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக WestJet நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடுமையான குளிர், பனிப்பொழிவின் காரணமாக விமான நிலைய ஊழியர்கள் வெளியில் வேலை செய்யும் நேரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தங்களின் விமாங்களின் பயண நேரத்தை சரிபார்த்துக் கொள்ள பயணிகளை விமான நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.