வாஷிங்டன், நவ 19 – காஸாவும் மேற்குக் கரையையும் நிர்வாகம் செய்யும் உரிமை பாலஸ்தீன நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலுக்கும் காஸாவுக்குமிடையே நடைபெற்றவரும் போரைத் தொடர்ந்து அவர் இந்த ஆலோசனையை பரிந்துரைத்துள்ளார். ஒரே அரசாங்க நிர்வாக முறையின் கீழ் காஸாவும் மேற்கு கரையும் ஒன்றினைந்த நிர்வாகத்தை கொண்டிருக்க வேண்டும். இரண்டு நாடுகள் என்ற அடிப்படையில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ஜோ பைடன் கேட்டுக்கொண்டார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் நீண்ட கால பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு நாடுகள் தீர்வுதான் ஒரே வழி என அவர் தெரிவித்தார். அதிபர் ஜோ பைடனின் இந்த ஆலோசனையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரிக்கவில்லை.