கோலாலம்பூர், ஜன 6 – பிப்ரவரி மாத இறுதியில் நாடாளுமன்றம் கூடும்போது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த மேலும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றமை அரசாங்கத்திற்கு தங்களது ஆதரவை தெரிவிப்பர் என புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சையட் அபு ஹுசின் ஹபீஸ் தெரிவித்தார். ஏழு அல்லது எட்டு பேர் அரசாங்கத்தை ஆதரிக்கும் பிரகடனத்திற்கான, தங்களது நேரத்திற்காக காத்திருக்கின்றனர் என அவர் கூறினார். நாடாளுமன்ற கூட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. தாம் அன்வாரை ஆதரிப்பதாக கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சையட் அபு ஹுசின் பகிரங்கமாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அன்வாரை ஆதரிப்பதாக பகிரங்கமாக பிரகடனப்படுத்திய பெரிக்காத்தான் நேஷனலின் 5ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் சையட் அபு ஹுசின் ஆவார்.