கோலாலம்பூர், நவ 28 – அரசாங்கத்தை கைப்பற்றும் தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்ளும்படி பெரிக்காத்தான நேசனல் கூட்டணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஆதரவு அலை திரும்பி வரும் இவ்வேளையில் அன்வார் இதனை தெரிவித்தார். புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் தமக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியின் தலைமை செயலாளமான டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் இன்று தமக்கு ஆதரவு தெரிவித்த பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சையட் அபு ஹுசின் ஹஃபீஸ் மீது கோபமாக இருக்கிறார் என தாம் நினைப்பதாக அன்வார் கூறினார்.
ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளப் போவதாக பேச்சு எழும்போதெல்லாம் கட்சி உறுப்பினர்கள் வெளியேறுகின்றனர். எனவே முதலில் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளப்போவதாக கூறிவரும் தவறான எண்ணங்களை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என தாம் கூறியதில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.