பெட்டாலிங் ஜெயா, பிப் 17 – பெட்டாலிங் ஜெயாவில் ஜாலான் கசிங்கில் முக்கிய அடையாளமாக இருந்துவந்த இ.பி.ஃப் கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக காலியாக இருந்தபின் விரைவில் புத்துணர்வை பெறவிருகிறது. கூட்டரசு நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிகளின் பார்வையிலிருந்து தப்பாத அந்த கட்டிடம் அடுத்த சில ஆண்டுகளில் மூத்த குடிமக்களை பரமாரிக்கும் மையமாக மாற்றப்படவிருக்கிறது. அந்த திட்டத்தை ‘PSL’ எனப்படும் ‘Pacific Senior Living Sdn Bhd’ மேற்கொண்டுள்ளது. இ.பி.ஃப் கட்டிடத்திதை மூத்த குடிமக்கள் நலன்களுக்கான மையமாக மாற்றுவதற்கு ‘PSL’ நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் சந்தை தொடர்பு நிர்வாகி மாலினி செல்வா தெரிவித்தார். எனினும் இத்திட்டம் குறித்து அவர் மேல் விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
Related Articles
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
1 hour ago
ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த ‘சூட்கேஸ்’ ; ஒரு வாரம் ஆகியும், இன்னும் உரிமைக் கோர யாரும் முன் வரவில்லை
2 hours ago