மூன்றாவது கணக்கு அறிமுகம்; EPF சந்தா விகிதம் மாறாது
கோலாலம்பூர், மார்ச்-4, ஊழியர் சேமநிதி வாரியம் இபிஎஃபின் மூன்றாவது கணக்கு அறிமுகம் காண்பதால், நடப்பில் உள்ள அதன் கட்டாய சந்தா விகிதத்தில் மாற்றம் இருக்காது.
இபிஎஃப் தலைமை செயல் அதிகாரி அஹ்மாட் சுல்கார்னாயின் ஓன் அதனைத் தெரிவித்துள்ளார்.
நடப்பில் கட்டாயப் பங்களிப்பு விகிதம் சந்தாத்தாரர்களுக்கு 11 விழுக்காடாகவும், முதலாளிகளுக்கு 13 விழுக்காடாகவும் உள்ளது.
இபிஎஃப் சந்தாத்தாரர்கள் தங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் பணத்தை மீட்க ஏதுவாக, Flexible Account என்ற பெயரில் அறிமுகம் காணும் இந்த மூன்றாவது கணக்கு, 2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அது குறித்த மேல் விவரங்கள் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் என சுல்கார்னாயின் சொன்னார்.
இபிஎஃபின் தற்போதையக் கட்டமைப்பின் படி, 55 வயதுக்குக் கீழ்பட்ட சந்தாத்தாரர்களின் முதலாவது கணக்கில் 70%-டும் இரண்டாவது கணக்கில் 30%-டுமாக சந்தா தொகைப் பிரிக்கப்படுகிறது.