இஸ்லாமாபாத், மார்ச் 4 – இரண்டாவது தவணையாக, பாகிஸ்தானின் பிரதமராக, ஷெபாஸ் ஷெரீப் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த பாகிஸ்தான் தேர்தலில், எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை ஆதரவை பெறவில்லை.
நிச்சயமற்ற அந்த தேசிய தேர்தல் முடிவுகளால், கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் மூன்று வாரங்களுக்கும் மேலாக தாமதமான வேளை ; நேற்று ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்வுச் செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமராக பதிவியேற்க ஒருவர் குறைந்தது 169 வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். எனினும், ஷெபாஸ் ஷெரீப் 201 பெரும்பான்மை வாக்குகளை பெற்று மீண்டும் பிரதமராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன் வாயிலாக, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவை பெற்ற ஒமார் அயூப்பை, ஷெபாஸ் ஷெரீப் தோற்கடித்துள்ளார்.
எனினும், ஷெபாஸ் ஷெரீப்பின் அந்த வெற்றிக்கு, இம்ரான் கானின், சன்னி இத்தேஹாட் கவுன்சில் கட்சியிடமிருந்து உரத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இம்ரான் கான் உடனடியாக விடுவிக்கபட வேண்டுமென கோரியுள்ள அவர்கள், தேர்தல் மோசடி நிகழ்ந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.