கோலாலம்பூர், ஜன 3 – தமது அடையாளத்தை பயன்படுத்தி பொய்யான முகநூல் கணக்கு திறக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மத் எம்.சி.எம்.சி ‘MCMC’ எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் செய்துள்ளார்.
பொறுப்பற்ற தரப்பினர் தமது பெயரை பயன்படுத்தி பொய் கணக்கை திறந்துள்ளதாகவும் அவ்வாறு அவர்கள் செய்த நோக்கம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
பொதுமக்களிடையே தவறான வியாக்கினம் ஏற்படுவதை தடுப்பதற்கு அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக இன்று காலையில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் செய்ததாக தமது முகநூலில் சுல்கிப்ளி பதிவிட்டிருக்கிறார்.
அந்த பொய்யான முகநூல் கணக்கில் இடம்பெற்ற அம்சங்களை புறக்கணிக்கும்படி அமனா கட்சியின் உதவித் தலைவருமான அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.