கோலாலம்பூர், டிச 22- முன்னாள் நிதியமைச்சர் துன் டைம் ஜைனுதீன் குடும்பத்திற்கு சொந்தமான 60 மாடிகளைக் கொண்ட அடையாள கோபுரமாக திகழும் இல்ஹாம் கோபுர கட்டிடத்தை எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
2009ஆம் ஆண்டின் எம்.ஏ.சி.சி சட்டத்தின் கீழ் தாங்கள் கேட்ட தகவலை வழங்கத் தவறிய குற்றத்திற்காக அந்த கோபுரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
2009ஆம் ஆண்டின் எம்.ஏ.சி.சி சட்டத்தின் 38 உட்பிரிவு 5ஆம் விதியின் கீழ் அறிக்கை வழங்கப்பட்டதற்கு எதிரான நடவடிக்கை எவரேனும் மேற்கொண்டால் எம்.ஏ.சி.சி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியம்.
அதோடு அந்த அறிக்கைக்கு ஏற்ப செயல்படாதது ஒரு தவறு என்பதால் அது ஒரு குற்றச்சாட்டு என்பதோடு ஒரு சொத்தின் மதிப்பைவிட இரண்டு மடங்கு அல்லது 50,000 ரிங்கிட் கூடுதலான தொகையை அபராதம் விதிக்க முடியும் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
டிசம்பர் 21ஆம் தேதி உள்நாட்டு ஊடகங்களில் அந்த அறிக்கையை எம்.ஏ.சி.சி விளம்பரப்படுத்தியதோடு மெனாரா இல்ஹாம் கட்டிடத்தையும் பறிமுதல் செய்தது.