Latestமலேசியா

புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பிப்ரவரி 19ஆம் தேதி மேலவை கூடுகிறது

கோலாலம்பூர், பிப் 9 –  புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக  பிப்ரவரி  19ஆம் தேதி மேலவை  கூடுகிறது. வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய  தலைவரை  தேர்ந்தெடுப்பதற்காக சிறப்பு மேலவைக் கூட்டம் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கும் என மேலவை செயலாளர் சுஜைரி அப்துல்லா தெரிவித்தார்.  

புதிய  தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக முன்கூட்டியே   மேலவை கூட்டத்தை  நடத்தும்படி  மேலவையின் துணைத்தலைவருக்கு  எழுதியுள்ள கடிதத்தில்   பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  தெரிவித்திருக்கிறார்.  முன்னாள் சட்ட அமைச்சருமான  வான் ஜுனைடி துவாங்கு  ஜாபர் சரவா மாநிலத்தின் புதிய  ஆளுநராக  பதவியேற்பதற்காக  மேலவை தலைவர் பதவியிலிருந்து விலகினார்.  ஜனவரி  29ஆம் தேதி அவர்  சபா மற்றும் சரவா  தலைமை  நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!