கோலாலம்பூர்,ஜன 28 – முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஜைனுடினுக்கு எதிராக நாளை
திங்கட்கிழமை ஜனவரி 29ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கொண்டுவரப்படும். 2009 ஆம் ஆண்டின் எம்.ஏ.சி.சி சட்டத்தின் 36 விதியின் உட்பிரிவு (2) இன் கீழ் சொத்துக்களை பிரகடனப்படுத்தத் தவறியதற்காக தாம் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என தமது வழக்கறிஞர்கள் தெரிவித்திருப்பதாக 85 வயதுடைய டைய்ம் ஜைனுடின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். நேற்று முன் தினம் எம்.ஏ.சி.சி அதிகாரிகள் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.