Latestமலேசியா

தகராறுக்கு பின் வயதான ஆடவரும் பெண்ணும் தீக்காயத்திற்கு உள்ளாகினர்

ஈப்போ, பிப் 29 – ஈப்போ,  Taman Utama Bercham மில்  நேற்று காலையில்   ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின்  வயதான ஆடவரும் ஒரு பெண்மணியும்  தீக்காயங்களுக்கு உள்ளாகினர். 67 வயதுடைய    அந்த ஆடவரும் , 54 வயதுடைய அந்த பெண்ணும் தீக்காயங்களினால்   சுயநினைவு இன்றி    Raja permaisuri Bainun  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ஒரு கார், மோட்டார் சைக்கிள்  மற்றும்   இருவரை உள்டக்கிய தீச்சம்பவம் குறித்து  அவரச அழைப்பை பெற்றதாக ஈப்போ போலீஸ் தலைவர்  Yahaya Hassan   தெரிவித்திருந்தார்.

  ஒரு வீட்டிற்கு முன்   ஒரு காரும் மோட்டார்சைக்கிளும்    எரிந்த நிலையில்  இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  அந்த தீச்சம்பவம் ஏற்படுவதற்கு முன் அவ்வீட்டில்  தகராறு ஏற்பட்ட சத்தத்தை  சாட்சிகள்  கேட்டுள்ளனர்.  குறறவியல் சட்டத்தின்  307 ஆவது விதியின் கீழ் கொலை முயற்சி தொடர்பில்   விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக  Yahaya தெரிவித்தார்.  உண்மையில் அவ்வீட்டில்  என்ன நடந்தது என்பது குறித்து  சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம்  போலீசார்  வாக்குமூலம் பதிவு செய்யவிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!