Latestமலேசியா

மலாக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்ட குழந்தை பராமரிப்பு மையம் மூடப்பட்டது

கோலாலம்பூர், நவ 3 – 12 மாத குழந்தை ஒன்று திடீரென சுயநினைவு இழந்ததைத் தொடர்ந்து மலாக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மையம் மூடப்பட்டது. பெர்தாம் ஜெயாவில் அந்த பராமரிப்பு மையத்தை மலாக்கா சமூக நலத்துறை பரிசோதனை செய்ததாகவும் அந்த மையம் அனுமதியின்றி மற்றும் லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக மலாக்கா சமூக நலத்துறையின் இயக்குனர் சுல்கிஃப்லி ஹனாஃபியா தெரிவித்தார்.

அந்த பராமரிப்பு மைத்திற்கு சீல் வைக்கப்பட்டதோடு அவை மீண்டும் திறக்கப்படுவதாக இருந்தால் 21 நாட்களுக்குள் அதன் உரிமையானர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

1984 ஆம் ஆண்டின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் சட்டவிதியின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுல்கிஃப்லி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!