Latestமலேசியா

ஷா ஆலாமில், தொழிற்சாலையில் அம்மோனியா கசிவு; பாதிக்கப்பட்ட 10 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

ஷா ஆலாம், பிப்ரவரி 16 – சிலாங்கூர், ஷா ஆலாமிலுள்ள, தொழிற்சாலை ஒன்றில், அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பத்து பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அச்சம்பவம், இன்று காலை, செக்‌ஷன் ஏழில் உள்ள, புக்கிட் ராஜா தொழிற்பேட்டை பகுதியிலுள்ள, தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்தது.

அச்சம்பவம் குறித்து காலை மணி 11.15 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததை, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் அமலாக்க பிரிவு துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் உறுதிப்படுத்தினார்.

தொழிற்சாலையில், அம்மோனியா வாயு சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலனின் வால்வில் இருந்து அம்மோனியா வாயு கசிந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அச்சம்பவத்தில், எட்டு பெண் தொழிலாளர்களும், இரு ஆண்களும் பாதிக்கப்பட்ட வேளை ; அதில், அருகிலுள்ள வேறு ஒரு தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர் ஒருவரும் அடங்குவார் என கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!