Latestமலேசியா

11 சிறுமி சகோதரனின் நண்பர்கள் எழுவரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம்; கிரிக்கில் அதிர்ச்சி

கிரிக், நவ 22 – பேராக் கிரிக்கில், 11 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரனின் நண்பர்கள் எழுவரால் மாற்றி மாற்றி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 3ஆம் திகதி, கம்போங் பாஹாட் லூவாரில், (Kampung Pahat Luar) இச்சம்பவம் நடந்தது தொடர்பில் அச்சிறுமியின் 36 வயது தாயார் புகார் செய்திருப்பதை கிரிக் மாவட்ட போலிஸ் தலைவர் சுல்கிப்ளி மாமுட் (Zulkifli Mahmud) உறுதிபடுத்தியுள்ளார்.

அந்த கொடூரச் சம்பவம் நடைப்பெற்ற போது, அச்சிறுமியின் தம்பி பார்க்க நேர்ந்ததாகவும் அந்த தாயார் கூறியுள்ளார்.

13 வயதிலிருந்து 31 வயதுக்கு உட்பட்ட அந்த எழுவரும் அச்சிறுமியின் அண்டை வீட்டின் ஒரு அறையில் அச்சிறுமியை கற்பழித்தாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இக்குற்றத்தை புரிந்த எழுவரில் அருவர் சகோதரர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட அனைவரும் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சுல்கிப்ளி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!