சென்னை , டிச 24 – தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகரான போண்டா மணி காலாமானார். 60 வயதுடைய அவர் ஏற்கனவே இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் மருத்துவ சிகிக்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு 10 மணியளவில் தமது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துமவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் போண்டா மணி 1991ஆம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் பவுனு பவுனுதான் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அண்மையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.