ஹமாஸ், நவ 25 – இஸ்ரேல்-ஹமாஸ் நான்கு நாள் போர் நிறுத்த உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வந்ததை அடுத்து 24 பிணையாளிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.
அவர்களில் 13 பேர் இஸ்ரேலியர்கள், 10 பேர் தாய்லாந்து நாட்டவர்கள் ஒருவர் பிலிப்பினவைச் சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் தகவல் வெளியிடப்பட்டுள்ளனர். விடுவிகப்பட்ட பிணையாளிகள் ஹெலிகாப்டர் மூலம் டெல் அவிவ்-வில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதனையடுத்து இஸ்ரேலிய தரப்பு தனது நாட்டு சிறைச்சாலைகளில் இருந்த 39 பாலஸ்தீன பெண்களையும் குழந்தைகளையும் விடுதலை செய்துள்ளது.
இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் 4 நாட்களில் 50 பிணையாளிகளை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
நேற்று இது அமுலுக்கு வந்ததை அடுத்து காஸாவுக்கு எரிபொருள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ள பிணையாளிகள் பட்டியல் தங்களிடம் ஹமாஸ் தரப்பிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இருப்பினும் அவர்கள் வந்து சேரும் வரை அந்த விபரம் வெளியிடப்படாது என்றும் அது அறிவித்துள்ளது.
இந்த இடைக்கால போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் ஹமாஸ்-சுக்கு எதிரான தாக்குதல் மீண்டும் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவு தெரிவித்துள்ளதொடு அப்போர் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.