கோலாலம்பூர், நவ 9- பள்ளிகளில் அறிவியல், கணிதம்,தொழிற்நுட்பம் கணிதம் ஆகிய STEM பாடங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என Page எனப்படும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் கல்வி குழுமத்திற்கான தலைவர் நூர் அசிமா அப்துல் ரஹீம் தெரிவித்திருக்கிறார். STEM பாடங்களில் ஆளுமையைக் கொண்ட உலகத் தரத்திலான மாணவர்ளை உருவாக்குவதற்கான முயற்சியை அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியறுத்தினார். அதோடு எதிர்காலத்தில் நமது இளம் தலைமுறையினர் வேலை வாய்ப்புக்களை பெறுவதற்கு ஆங்கில பாடத்திற்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என அசிமா வலியுறுத்தினார். தற்போது அரசாங்கம் முன்னுரிமை எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் தவறாக இருப்பதாக அவர் கூறினார். பாஸ் கட்சியைவிட அதிகமாக இஸ்லாத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் சிந்தனை தவறாகும். அரசாங்கம் தற்போது தவறான தடத்தில் சென்று கொண்டிருப்பதாக அசிமா தெரிவித்தார்.