Latestமலேசியா

காவல் அதிகாரியை விமர்சித்து காணொளி வெளியிட்ட இளைஞன் கைது

பாகன் செராய், டிச 2 – காவல்துறை அதிகாரியின் மேல் உள்ள அதிருப்தியால், இளைஞன் ஒருவன் டிக் டோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டி, அநாகரிக வார்த்தைகளால் விமர்சித்து வீடியோவைப் பதிவேற்றியதைத் தொடர்ந்து நேற்று போலீஸரால் கைது செய்யப்பட்டான்.

வைரலான இந்த காணொளி தொடர்பான புகார், கடந்த புதன்கிழமை கிடைக்கபெற்றதாக, கெரியன் மாவட்ட காவல்துறைத் தலைவர், Juna Yusoff கூறினார்.

விசாரணைக்கு உதவுவதற்காகச் வீடியோவை பதிவேற்றம் செய்ததாகத் சந்தேகப்படும்14 வயது நபரும், அவரது 17 வயது நண்பரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரே பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நபர் கைது செய்யப்பட்டுள்ளான் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருவேளை அதிகாரிகளின் செயல்களில் திருப்தி அடையவில்லை என்றால், சட்ட வழிகளைப் பயன்படுத்தலாம் என்று Juna Yusoff ஓர் அறிக்கையில் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!