Latestமலேசியா

ஜோகூரில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது; 1,000 பேர் வரை வெளியேற்றம்

ஜோகூர் பாரு, ஜன 5 – ஜோகூரில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. நேற்றிரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் 1000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

13 நிவாரண மையங்களில் 1,024 பேர் தங்கியிருப்பதமாக தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனமான Nadma தெரிவித்திருக்கிறது.

நேற்று நண்பகல் 2 மணியளவில் ஜோகூரில் நிவாரண மையங்களில் 330 பேர் மட்டுமே தங்கியிருந்தனர். நள்ளிரவுக்குள் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.

கடுமையாக மழை பெய்ததைத் தொடர்ந்து நேற்றிரவு குளுவாங், மெர்சிங், ஜோகூர் பாரு மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தின் காரணமாக ஜோகூர் மாநிலத்தில் பல இடங்களில் சாலைகளும் மூடப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!