டெல்லி, பிப் 5 – டெல்லியில் தங்கை திருமணத்திற்காக வைத்திருந்த தங்க நகையை சொந்த வீட்டில் இருந்து சகோதரியே திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 30ம் திகதி நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து கமலேஷ் என்ற 30 வயதுடைய மணப்பெண் தனது திருமண நகைகள் காணாமல் போய்விட்டதாக போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலிஸ், புர்கா அணிந்த பெண் ஒருவர் வீட்டிற்குள் நுழைவதை கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையை தீவிரப் படுத்திய போலிசார், தங்கையின் திருமணத்திற்காக தாய் வீட்டில் வைத்து இருந்த லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் 25,000 பணத்தை சுவேதா என்ற பெண் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியான தகவல் என்ன்வென்றால் சுவேதா என்பவர் கமலேஷின் அக்கா என்பதே.
சுவேதாவை போலிசார் கைது செய்து விசாரித்த போது, தன்னுடைய தாய், தங்கை மீது மட்டும் மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் பொறாமையில் இவ்வாறு செய்ததாகவும், அதே சமயத்தில் தனக்கிருந்த சில கடன்களை தீர்க்கவும் இத்திருட்டை செய்ததாகவும் கூறியுள்ளார்.